ADDED : ஆக 08, 2024 09:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: இடைப்பாடி, வெள்ளாளபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சன்னாசி, 60.
இவர் நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக, பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தார். ஜலகண்டாபும் - சின்னப்-பம்பட்டி சாலையில் சின்னம்பட்டி மண் திட்டு அருகே சென்ற-போது, மொபட்டில் வேகமாக வந்தவர், சன்னாசி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த சன்னாசியை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். அவரது மனைவி பிச்சையம்மாள் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.