ADDED : அக் 26, 2024 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 29. இவரது தாத்தா, கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி, 83. பெட்டி கடை வைத்திருந்தார். இவர் கடந்த, 23 மதியம், 3:15 மணிக்கு அருகே டீ வாங்க
சென்றுவிட்டு, திரும்ப கடைக்கு வரும் வழியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, 'பல்சர்' பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்
நேற்று உயிரிழந்தார். மணிகண்டன் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.