ADDED : நவ 22, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் மீன்வளத்துறை சார்பில் நேற்று, உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து கீரைக்காரனுாரில், பிரதம மந்திரி மத்திய சம்பதா யோஜனா திட்டத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த மீன் இறங்கு தளத்தை, மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா கலைசெல்வி திறந்து வைத்தார். மீன்வளத்துறை அலுவலர்கள், மீனவர் கூட்டுறவு சங்க அலுவலர்கள், கீரைக்காரனுார் மீனவர்கள் பங்கேற்றனர்.