/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவு
/
அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவு
ADDED : அக் 21, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிக்கை: சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கம் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த, 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
குறிப்பிட்ட கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இந்த உத்தரவு, நவ., 3 வரை அமலில் இருக்கும். அதேநேரம் விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம், மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

