/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதி-காரம்
/
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதி-காரம்
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதி-காரம்
நிதிக்குழு மானியம் கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதி-காரம்
ADDED : பிப் 04, 2025 06:45 AM
சேலம்: ஊரக உள்ளாட்சியில், மக்கள் பிரதிநிதி பதவி கடந்த, 5ல் முடிந்-தது. மறுநாள் முதல் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. எனினும் அவர்களால், 15வது நிதிக்குழு மானியம் செயல்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. மானி-யத்தை கையாள்வதற்கான தரவு, ஊரக உள்ளாட்சி இணை-யத்தில், 'அப்டேட்' செய்யாமல் கிடப்பில் போட்டதே செயல்ப-டுத்த முடியாததற்கு காரணம்.
இதனால் புது சாலை அமைத்தல், குடிநீர், மின்விளக்கு, சுகா-தாரம், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை
நிறைவேற்று-வது கேள்விக்குறியானது. இதுகுறித்து புகார் எழுந்ததால் அதற்-கான பணிகள் உடனுக்குடன்
முடுக்கி விடப்பட்டு, இன்றுடன் நிறைவு பெறுவதால், மானியத்தை பயன்படுத்துவதற்கான அனு-மதிக்கு வழி
கிடைத்துவிட்டது. அத்துடன், மானியத்தை கையாள ஊராட்சி செயலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறியதாவது: மத்திய
அரசின், 15வது நிதிக்குழு மானியத்தை விடுவிக்க, ஊராட்சி தலைவருக்கு பதில் தனி அலுவலருக்கும்,
துணைத்தலைவருக்கு பதில் ஊராட்சி செய-லருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஊராட்சி
செயலரின் அசல் பான் கார்டு, ஆதார், மார்பளவு புகைப்படம், மொபைல் ஆகியவை, இணையத்தில் பதிவேற்றும்
பணி, சேலம் மாவட்டத்தில் கடந்த, 30ல் தொடங்கி, இதுவரை, 17 ஒன்றி-யத்தில் முடிந்துள்ளது.பிப்., 3ல்(நேற்று), தலைவாசல், பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஒன்-றியத்தில் பதிவேற்றும் பணி
மேற்கொள்ளப்படுகிறது. பின் செயல்பாட்டுக்கு வரும் இணைய சேவை மூலம், ஊராட்சி செய-லரை அடுத்து,
தனி அலுவலர் ஒப்புதல் வழங்கி, மானியத்தை விடுவித்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றலாம். மண்டல
துணை பி.டி.ஓ., பணிகளை ஆய்வு செய்து, அவரே மானியத்-துக்கு ஒப்புதல் அளிப்பது என்பது நேர்த்தியாக
இருக்காது என்-பதால், அவருக்கு பதில் ஊராட்சி செயலருக்கு அதிகாரம் வழங்-கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

