/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி
/
கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி
ADDED : மே 30, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்பந்த வன ஊழியர்களான, நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்த தமிழ்செல்வன், 29, சேலம், செட்டிச்சாவடியை சேர்ந்த முருகேசன், 46, நேற்று ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு, கோதுமை தவிடை மான்கள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் எடுத்து சென்ற போது, கடமான் ஒன்று, தமிழ்செல்வனை முட்டித்தள்ளியது.
உடனிருந்த முருகேசன், அவரை காப்பாற்ற முயன்றார். வன ஊழியர்கள், இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வழியில் தமிழ்செல்வன் இறந்தார்.