/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கமிஷனர் வராததால் கட்சி கூட்டம் ஒத்திவைப்பு
/
கமிஷனர் வராததால் கட்சி கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : மே 07, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடங்கணசாலை,:இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கட்சிகளின் பேனர், கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் பவித்ரா தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று மதியம், 3:00 மணிக்கு நடக்கவிருந்தது.
அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வந்தனர். மாலை, 4:00 மணி வரை கமிஷனர் வரவில்லை. கட்சியினர் தொடர்பு கொண்டபோது, கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். இதனால் கட்சியினர் கலைந்து சென்றனர்.