/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டியிட கட்சியினர் கோரிக்கை
/
கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டியிட கட்சியினர் கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டியிட கட்சியினர் கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டியிட கட்சியினர் கோரிக்கை
ADDED : மார் 13, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : தே.மு.தி.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறுதல்; கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அல்லது விஜயபிரபாகரன் போட்டியிடுதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம், கூட்டணி குறித்து கருத்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து இளங்கோவன், 'தே.மு.தி.க., கூட்டத்துக்கு வரும்போது பேன்ட் அணிந்து கட்சியினர் வரக்கூடாது. கட்சி வேட்டி அணிந்து பங்கேற்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.

