sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை

/

அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை

அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை

அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை


ADDED : ஜூலை 20, 2025 02:58 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:மின்விளக்கு எரியாததால் கும்மிருட்டில், அரசு பஸ்சில் பயணியர் அவஸ்தையுடன் பயணித்தனர்.

விழுப்புரம் கோட்டம், சிதம்பரம் கிளை பணிமனை அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு, சிதம்பரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு, 11:00 மணிக்கு சேலம் மாவட்டம், ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்றபோது, 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். ஆனால், பஸ்சில், மின் விளக்கு பழுதாகி எரியவில்லை.

மின்விளக்கை எரிய வைக்க, சிறிது நேரம் டிரைவர் முயற்சி செய்தும் பலனில்லை. பின், கண்டக்டரிடம் தெரிவித்து விட்டு, பஸ்சை இயக்கினார். இதனால் கண்டக்டரும், டிக்கெட் தருவதில் சிரமப்பட்டார்.

விளக்கு எரியாததால், பயணியர் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரைவர், கண்டக்டர், 'சேலம் சென்றதும் மின்விளக்கு சரிசெய்யப்படும்' என்றனர். இருளில் பயணியர், சேலம் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us