/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை பூங்காவில் நாய்க்கடி இலவசம் 2 நாளில் 10 பேரை கடித்து குதறியதால் மக்கள் அச்சம்
/
மேட்டூர் அணை பூங்காவில் நாய்க்கடி இலவசம் 2 நாளில் 10 பேரை கடித்து குதறியதால் மக்கள் அச்சம்
மேட்டூர் அணை பூங்காவில் நாய்க்கடி இலவசம் 2 நாளில் 10 பேரை கடித்து குதறியதால் மக்கள் அச்சம்
மேட்டூர் அணை பூங்காவில் நாய்க்கடி இலவசம் 2 நாளில் 10 பேரை கடித்து குதறியதால் மக்கள் அச்சம்
ADDED : ஆக 18, 2025 03:47 AM
மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவில் நாய்கள் கடித்ததில், இரண்டு நாட்-களில், 10 சுற்றுலா பயணிகள் காயமடைந்தது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ள பூங்காவை பார்வையிட, சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்-றனர். மூன்று நாட்கள் தொடர் அரசு விடுமுறையால், பூங்காவை ஏராளமானோர் பார்வையிட்டனர். சமீபகாலமாக பூங்காவில் தெரு-நாய்கள் கூட்டம், கூட்டமாக நடமாடுகின்றன. நேற்று முன்தினம் பூங்காவை பார்வையிட்ட சுற்றுலா பயணியர் நான்கு பேரை, ஒரு நாய் கடித்து காயப்படுத்தியது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர், அணை பூங்காவை சுற்றிப்பார்க்க நேற்று வந்தனர். அந்த குடும்-பத்தை சேர்ந்த, 12 வயது சிறுவனை, ஒரு தெரு நாய் கடித்து காயப்படுத்தியது. பூங்காவில் சுற்றித்திரியும் தெருநாய்கள், பயணி-யரை கடிப்பது, திடீரென விரட்டுவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. நாய்களை பிடிக்க, பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய, மேட்டூர் நகராட்சி கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்-ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நேற்று மதியம் ஒரு நாய், 3 பெண்கள் உள்பட, 5 பேரை கடித்தது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்-றனர்.

