/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ம் நாளாக ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
/
2ம் நாளாக ஒன்றிய ஆபீசை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : நவ 12, 2025 01:21 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டி ஊராட்சி ஆணையாம்பட்டி புதுாரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள், சீரான குடிநீர் வினியோகம்; தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்டு, நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலர்கள் யாரும் இல்லாததால் திரும்பிச்சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஆணையாம்பட்டி புதுாரை சேர்ந்த மக்கள், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், துணை பி.டி.ஓ., யுவராஜ் பேச்சு நடத்தினார். அப்போது,
'பி.டி.ஓ.,விடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார். பின் மக்கள் கலைந்தனர்.

