sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டா கேட்டு மக்கள் சாலை மறியல்

/

பட்டா கேட்டு மக்கள் சாலை மறியல்

பட்டா கேட்டு மக்கள் சாலை மறியல்

பட்டா கேட்டு மக்கள் சாலை மறியல்


ADDED : ஜூன் 13, 2025 01:46 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், வீட்டுமனை பட்டா வழங்காமல் நிறுத்தி வைத்ததாக கூறி, பூமிரெட்டியூர் மக்கள், மேட்டூர், அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நங்கவள்ளி, பெரியசோரகை ஊராட்சி பூமிரெட்டிப்பட்டி குடியிருப்பை சேர்ந்த, 31 பயனாளிகளுக்கு, 2022ல் அரசு குன்று புறம்போக்கு நிலத்தை, கிராம நத்தமாக மாற்றினர். தொடர்ந்து நேற்று சேலத்தில் நலத்திட்ட உதவி வழங்கும்போது, பட்டா வழங்குவதாக வருவாய் அலுவலர்கள் கூறிய நிலையில், அதை நிறுத்தி வைத்ததாக புகார் எழுந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த, 29 பேர் நேற்று காலை, 9:30 மணிக்கு மேட்டூர் ஆர்.டி.ஓ., குடியிருப்பு எதிரே, 3 ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டூர் போலீசார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us