sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மண் கொட்டி சமன்படுத்தும் மக்கள்

/

மண் கொட்டி சமன்படுத்தும் மக்கள்

மண் கொட்டி சமன்படுத்தும் மக்கள்

மண் கொட்டி சமன்படுத்தும் மக்கள்


ADDED : ஜன 04, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 04, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஜன. 4-

ஏற்காடு செல்ல, கொண்டப்பநாயக்கன்பட்டி; குப்பனுார்; கொளகூர் என, 3 வழிகள் உள்ளன. இதில் கொளகூர் வழியே தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால் இச்சாலை மிகவும் மோசமடைந்ததால், சுற்றுலா பயணியர், கரடியூரை சுற்றியுள்ள, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், கரடியூர், கொளகூர் உள்பட, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த டிச., 30ல், ஏற்காடு பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர். அதில், 'புத்துார் பிரிவு சாலை முதல் கரடியூர், கொளகூர், சொரக்காப்பட்டி வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து, விரிவாக்கம் செய்து சீரமைத்தால், கிராம மக்கள், சுற்றுலா பயணியருக்கு வசதியாக இருக்கும்' என கூறியிருந்தனர்.

அரசு, அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அச்சாலையை சுற்றியுள்ள கிராம மக்கள், நேற்று காலை, சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கினர். முதலில் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் மண், ஜல்லிகளால் நிரப்பி சீரமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us