ADDED : ஆக 14, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: சேலம், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில், அப்-பல்கலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுச்-செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். அதில் பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் பணிபுரிந்தவர்களை, பல்கலையில் நியமனம் செய்-யக்கூடாது; தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள், கல்வி தகுதியை உயர்த்திய நிலையில் இரு ஆண்டாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தினர். தலைவர் கனிவண்ணன், பொருளாளர் பாண்டியராஜன், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
