sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

/

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 17, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 17, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி ேஷக விழா கோலாகலமாக நடந்தது.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில், 800 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் கோவில் முன் அமைக்கப்பட்ட யாக சாலையில், முதல் கால யாக பூஜை, நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 9:30 மணிக்கு மேல் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை, கோவில் குருக்கள் கோபுரத்திற்கு எடுத்து சென்றனர். 9:45 மணிக்கு மேல் கோபுர கலசத்தில் புனித நீரை கோவில் குருக்கள் ஊற்றியபோது, கோவிந்தா கோஷம் முழங்க, பக்தர்கள் கோஷமிட்டு தரிசித்தனர்.

கலசத்திற்கு தீபாராதனை செய்து, பக்தர்கள் மீது புனித நீர், பூக்கள் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். செயல் அலுவலர் புனிதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us