ADDED : டிச 11, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், அம்மாபேட்டை, டி.வி.கே., ரோடு, நகராட்சி காலனியை சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி சரவணன், 44. இவரது, 11 வயது மகனும், உறவினர் மகளான, 10 வயது சிறுமியும், வீடு முன் விளையாடினர். அப்போது சிறுவன், சிறுமியை கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த மற்றொரு உறவினர் சீனிவாசன், 19, என்பவர், சிறுவனை அடித்துள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர், சீனிவாசனை தட்டிக்கேட்டதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சரவணன் வீட்டில் இருந்தார். அப்போது சீனிவாசன், பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, தீ பற்ற வைத்து, சரவணன் வீட்டுக்குள் வீசியுள்ளார். இதில் அங்கிருந்த துணிகள் எரிந்துள்ளன. அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார், சீனிவாசனை கைது செய்தனர்.

