sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தை 3 ஆக பிரிக்க பா.ம.க., வலியுறுத்தல்

/

சேலத்தை 3 ஆக பிரிக்க பா.ம.க., வலியுறுத்தல்

சேலத்தை 3 ஆக பிரிக்க பா.ம.க., வலியுறுத்தல்

சேலத்தை 3 ஆக பிரிக்க பா.ம.க., வலியுறுத்தல்


ADDED : டிச 15, 2024 01:04 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 15-------

பா.ம.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று நடந்தது. அதில் கவுரவ தலைவர் மணி பேசினார். தொடர்ந்து, வரும், 21ல் திருவண்ணாமலையில் நடக்க உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. எம்.எல்.-ஏ.,க்கள் அருள், சதாசிவம், மாவட்ட தலைவர் ராசரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மணி கூறியதாவது:

மேட்டூர் அணை உபரிநீர் வீணாகாமல், சேலம் மாவட்டம் முழுதும் பயன்பெறும்படி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும். அண்மையில் மழை வெள்ளத்தால் திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் சேதமடைந்தன. சென்னைக்கு என்றால், 6,000, பிற பகுதிகள் என்றால், 2,000 ரூபாய் தான் அரசு அறிவிக்கிறது. இதுவும் முறையாக அனைவரையும் சென்றடையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 6,000 ரூபாய் வழங்க வேண்டும்.

அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய, பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும். அதன்படி சேலம் மாவட்டத்தை, 3 ஆக பிரிக்க வேண்டும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நல்ல திட்டம் தான். நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us