sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாத்துக்குடியில் திருடியவரை சேலத்தில் பிடித்தது போலீஸ்

/

துாத்துக்குடியில் திருடியவரை சேலத்தில் பிடித்தது போலீஸ்

துாத்துக்குடியில் திருடியவரை சேலத்தில் பிடித்தது போலீஸ்

துாத்துக்குடியில் திருடியவரை சேலத்தில் பிடித்தது போலீஸ்


ADDED : ஆக 27, 2025 03:11 AM

Google News

ADDED : ஆக 27, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:துாத்துக்குடியில் வேலை பார்த்த கடையில் 37 சவரன் தங்க கட்டிகளை திருடி தப்பிய ஊழியரை, சேலத்தில் ரயில்வே போலீசார் பிடித்தனர்.

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் விகாஷ். துாத்துக்குடியில் பழைய நகைகளை உருக்கி, கட்டியாக்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரிடம், மஹாராஷ்டிராவை சேர்ந்த மாற்றுத்திறனாளி விட்டல், 35, கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்த நிலையில், நேற்று முன்தினம் கடையில் இருந்து மாயமானார்.

சந்தேகமடைந்த விகாஷ், கடையில் சோதனை செய்தபோது, 37.25 சவரன் தங்க கட்டி, பணம் காணாமல் போனது தெரிந்தது. புகாரில், போலீசார் விசாரித்தனர். திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், விட்டல் ஏறிச்சென்றது தெரிந்தது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, ரயில் சேலத்தை அடைந்தது. பொதுப்பெட்டியில் பயணித்த விட்டலை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து தங்க கட்டி மற்றும் 43,300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us