ADDED : ஏப் 27, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடியில், போலீஸ் அணிவகுப்பு நேற்று இரவு, 10:00 மணிக்கு நடந்தது. அதில் வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் முதல் பேளூர் பிரிவு சாலை வரை, அணி
வகுத்து நடந்து சென்றனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கூறுகையில், ''குற்றச்-சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இரவில், வார இறுதி நாட்களில் கொள்ளை, திருட்டு, விபத்து, வழிப்பறி, கடத்தல் போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது,'' என்றார்.

