/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சனி மகா பிரதோஷம் சிவாலயங்களில் பூஜை
/
சனி மகா பிரதோஷம் சிவாலயங்களில் பூஜை
ADDED : அக் 19, 2025 03:03 AM
சேலம்: சனி மகா பிரதோஷத்தை ஒட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு உள்ளிட்ட அபிேஷகம் செய்து வில்வ மாலைகளால் அலங்கரித்து மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது.
வெள்ளி ரிஷப வாகனத்தில், ஸ்வர்ணாம்பிகை அம்மனுடன் சுகவனேஸ்வரர் அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள், வெள்ளி ரிஷப வாகனத்தை தோளில் சுமந்து, 'சிவாய நம ஓம் நமச்சிவாய' கோஷம் எழுப்பிய-படி, 3 முறை கோவிலை வலம் வந்தனர்.அதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பெரியநா-யகி அம்மன், கரபுரநாதருக்கு அபிேஷகம் செய்து சர்வ அலங்கா-ரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜை நடந்-தது.
ஆத்துார் கைலாசநாதர், தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்-தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.