sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்

/

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தபால் அனுப்பும் போராட்டம்


ADDED : செப் 19, 2024 07:40 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் தமிழக அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.

சேலத்தில் மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகத்தில், மதியம், 1:00 மணிக்கு கோரிக்கை தபால் அனுப்பி அரசை வலியுறுத்தி

போராட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில் மாவட்டத்துக்கு உட்பட்ட, 20 ஒன்றியங்களை சேர்ந்த, 385 ஊராட்சிகளில், 226 செயலர்கள், தலா, 4 தபால்களை அனுப்பினர். அதன்படி தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சி அமைச்சர், ஊரக வளர்ச்சி கூடுதல்

தலைமை செயலர், இயக்குனர் ஆகியோருக்கு தனித்தனியே என, 904 தபால்கள் அனுப்பப்பட்டன. தொடர்ந்து வரும், 27ல் ஒருநாள் தற்செயல் விடுப்பெடுத்து, சென்னையில் தமிழக அளவில் பெருந்திரள் முறையீட்டு

இயக்கம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us