sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

/

7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்


ADDED : ஜூலை 28, 2025 03:57 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணை அடிவாரம் முதல் கரூர் வரை, ஒவ்வொரு, 10 கி.மீ.,க்கு இடையே செக்கானுார், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி, வெண்டிப்பாளையம், சோளசிராமணி என, 7 இடங்களில், கதவணை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஒன்றில், 30 வீதம், 7 கதவணைகளில், 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, காவிரி ஆற்றில் வினாடிக்கு, 20,000 கன அடி நீர் திறக்க வேண்டும்.

அதிகபட்சம், 35,000 கனஅடி நீர் காவிரியில் வெளியேறும் வரை, கதவணைகளில் மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால் நேற்று மதியம் வினாடிக்கு, 75,000 கனஅடி, மாலை, 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதேநேரம் பாசனத்துக்கு திறக்கப்படும், 25,000 கன அடி நீர் மூலம், அடிவாரம் உள்ள அணை மின் நிலையத்தில், 50 மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில், 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஆனால், 3வது அலகில் பழுதுபார்ப்பு பணியால், 50 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தவிர கடந்த, 22 முதல், 18,000 கனஅடி நீர், அணை, சுரங்க மின் உற்பத்தி நிலையங்கள் வழியே வெளியேற்றி, 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us