sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழில் வரியை கைவிடக்கோரி விசைத்தறியாளர் ஆர்ப்பாட்டம்

/

தொழில் வரியை கைவிடக்கோரி விசைத்தறியாளர் ஆர்ப்பாட்டம்

தொழில் வரியை கைவிடக்கோரி விசைத்தறியாளர் ஆர்ப்பாட்டம்

தொழில் வரியை கைவிடக்கோரி விசைத்தறியாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 11, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், கோட்டை மைதானத்தில், மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின், சி.ஐ.டி.யு., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட உதவி தலைவர் வெங்கடபதி தலைமை வகித்தார்.

பொதுச்செயலர் பொன்.ரமணி பேசுகையில், ''சேலம் மாநகர் பகுதியில் பெரும்பாலோர், வீடுகளில் விசைத்தறி இயந்திரத்தை நிறுவி ஜவுளி உற்பத்தி செய்து, குடும்பம் நடத்துகின்றனர். மாநகராட்சி நிர்வாகம், விசைத்தறி கூடத்துக்கு சதுரடிக்கு, 27 ரூபாய் வரி விதிப்பை அமல்படுத்துவதால், விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஏற்கனவே, ஜி.எஸ்.டி., சூரத் ஜவுளி விற்பனையால் விசைத்தறி தொழில் நலிந்துள்ள நிலையில், தொழில் வரி விதிப்பால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழக்க செய்துவிடும் என்பதால், புது தொழில்வரி விதிப்பை மாநகராட்சி கைவிட வேண்டும்,'' என்றார்.

துணைத்தலைவர் பச்சமுத்து, சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் இளங்கோ உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us