/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராகு காலத்தில் தாயாருக்கு கட்டிய தாலி 9 பட்டாச்சாரியார்களுக்கு 'மெமோ' வழங்கல்
/
ராகு காலத்தில் தாயாருக்கு கட்டிய தாலி 9 பட்டாச்சாரியார்களுக்கு 'மெமோ' வழங்கல்
ராகு காலத்தில் தாயாருக்கு கட்டிய தாலி 9 பட்டாச்சாரியார்களுக்கு 'மெமோ' வழங்கல்
ராகு காலத்தில் தாயாருக்கு கட்டிய தாலி 9 பட்டாச்சாரியார்களுக்கு 'மெமோ' வழங்கல்
ADDED : அக் 20, 2024 01:18 AM
ராகு காலத்தில் தாயாருக்கு கட்டிய தாலி
9 பட்டாச்சாரியார்களுக்கு 'மெமோ' வழங்கல்
ஓமலுார், அக். 20--
வெங்கட்ரமண சுவாமி திருக்கல்யாணத்தில் ராகு காலத்தில் தாலி கட்டப்பட்டதால், 9 பட்டாச்சாரியார்களுக்கு மெமோ வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, காருவள்ளியில் உள்ள வெங்கட்ரமணர் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அக்கோவிலில் புரட்டாசி தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
கோவில் தலைமை பட்டாச்சாரியரான ராம பட்டாச்சாரியார் தலைமையில், பக்தர்கள் மத்தியில் சுவாமிக்கு கல்யாண சடங்கு தொடங்கியது. ஆனால் நல்ல நேரமான காலை, 9:00 10:30 மணிக்குள் சுவாமிக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலையில், 11:30 மணிக்கு ராகு காலத்தில் தாலி கட்டப்பட்டது. இந்நிகழ்வு, உள்ளூர் கேபிள், 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது கோவில் ஆகம விதியை மீறப்பட்டதாக, பக்தர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக தாமதம் செய்யப்பட்டதா என்ற பேச்சு, பக்தர்கள் இடையே எழுந்தது.
இதுகுறித்து நேற்று தேரோட்டத்துக்கு முன், கோவில் செயல் அலுவலர் சரண்யா, கோவிலில் பணிபுரியும், 9 பட்டாச்சாரியார்களை அழைத்து, ராகு காலத்தில் தாலி கட்டப்பட்டது குறித்து அலுவலகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சரண்யா கூறுகையில், ''திருக்கல்யாணத்தில் நல்ல நேரம் கடந்து தாலி கட்டியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. நல்ல நேரத்தில் சடங்குகளை தொடங்கினால் போதும். எப்போது வேண்டுமானாலும் தாலி கட்டலாம் என அவர்கள் பதில் அளித்தனர். இச்சர்ச்சை குறித்து, 9 பேருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.