/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடனுக்கு நிலத்தை கிரயம் செய்ததில் பிரச்னை; பெண் தற்கொலை; துாண்டிய 7 பேர் மீது வழக்கு
/
கடனுக்கு நிலத்தை கிரயம் செய்ததில் பிரச்னை; பெண் தற்கொலை; துாண்டிய 7 பேர் மீது வழக்கு
கடனுக்கு நிலத்தை கிரயம் செய்ததில் பிரச்னை; பெண் தற்கொலை; துாண்டிய 7 பேர் மீது வழக்கு
கடனுக்கு நிலத்தை கிரயம் செய்ததில் பிரச்னை; பெண் தற்கொலை; துாண்டிய 7 பேர் மீது வழக்கு
ADDED : மே 29, 2024 07:53 AM
தலைவாசல் : கடனாக, 21 லட்சம் ரூபாய் வாங்கி, 2 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்த விவகாரத்தில், பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வெள்ளையூரை சேர்ந்த லட்சுமணன் மனைவி ஜெயந்தி, 42. இவருக்கு அதே ஊரில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 2 ஏக்கர் நிலத்தை, 2023 மார்ச், 1ல், அதே ஊரை சேர்ந்த நாகராஜன், 55, என்பவருக்கு கிரையம் செய்து வைத்து, 21 லட்சம் ரூபாய் கடனாக, ஜெயந்தி பெற்றுள்ளார். அதற்கு மாதம், 31,500 வீதம் ஓராண்டாக வட்டி கட்டியுள்ளார். 2 மாதங்களுக்கு முன், 'கடன் தொகையை கொடுத்துவிடுகிறோம். நிலத்தை கிரையம் செய்துதாருங்கள்' என, ஜெயந்தி, அவரது குடும்பத்தினர் கேட்டனர். அதற்கு நாகராஜன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து சேலம் எஸ்.பி., அலுவலகத்தில், ஜெயந்தி புகார் கொடுத்தார். இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது நாகராஜன், 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக கூறினார். இதுதொடர்பாக, 'வீரகனுார் போலீசார் விசாரிப்பர்' என கூறி, எஸ்.பி., அலுவலக போலீசார் அனுப்பிவைத்தனர்.சில நாட்களுக்கு முன் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்து காணப்பட்ட ஜெயந்தி, கடந்த, 26ல் களைக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.ஜெயந்தியின் மகள் மலர்விழி புகார்படி வீரகனுார் போலீசார், நாகராஜன், அவரது மனைவி மணிமேகலை, உறவினர்கள் என, 7 பேர் மீது தற்கொலைக்கு துாண்டுதல் உள்பட, 4 பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிந்து அவர்களை தேடுகின்றனர்.