தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தம்பதியை குத்திய தொழிலாளிக்கு 'காப்பு'

தம்பதியை குத்திய தொழிலாளிக்கு 'காப்பு'

தம்பதியை குத்திய தொழிலாளிக்கு 'காப்பு'


ADDED : ஆக 21, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவசல், வெள்ளையூரை சேர்ந்த, கூலித்தொழிலாளி செல்வ-குமார், 29. இவரது குழந்தைகள், தெருவில் விளையாடிக்கொண்-டிருந்தபோது, அதே ஊரைச்சேர்ந்த தொழிலாளி ரவிக்குமார், பைக்கில் அதிவேகமாக சென்றார். இதுகுறித்து செல்வகுமார் கேட்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திர-மடைந்த ரவிக்குமார், வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, செல்வக்குமாரை குத்தியுள்ளார்.

தடுக்க முயன்ற அவரது மனைவி தனலட்சுமியையும் கத்தியால் குத்தியுள்ளார். தம்பதியர் காயமடைந்து, ஆத்துார் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டனர். செல்வகுமார் புகாரில், வீர-கனுார் போலீசார், ரவிக்குமாரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us