ADDED : ஏப் 23, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துாரை சேர்ந்தவர் அயுப்கான், 29. இவர், மாமாவை சென்னைக்கு அனுப்ப, கடந்த, 20ல், 'டியோ' மொபட்டில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அதன் முன்புறம் மொபட்டை நிறுத்திவிட்டு, மாமாவை அனுப்பிவிட்டு திரும்பியபோது,
மொபட்டை காணவில்லை. அயுப்கான் புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரித்ததில், பெரமனுார், பிள்ளை தெருவை சேர்ந்த ராஜகணபதி, 42, திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.

