sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மயான ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கறுப்பு கொடி கட்டி போராட்டம்

/

மயான ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கறுப்பு கொடி கட்டி போராட்டம்

மயான ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கறுப்பு கொடி கட்டி போராட்டம்

மயான ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கறுப்பு கொடி கட்டி போராட்டம்


ADDED : டிச 24, 2025 09:00 AM

Google News

ADDED : டிச 24, 2025 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்து, கீழ் தொம்பை மலைக்கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கான மயான பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் எழுந்தது. கடந்த நவ., 20ல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் வழங்கியும், அடுத்த கட்ட நடவடிக்கை இல்லை.

இதுதொடர்பாக கடந்த, 5ல் நடந்த பேச்சில், 8ல் நில அளவீடு செய்து, 11ல் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கூறினர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து, கீழ்தொம்பை மலைவாழ் மக்கள், அவர்களது வீடு, தெரு, சாலைகளில், நேற்று கறுப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து ஊரின் மைய பகுதியில், மலைவாழ் மக்கள் சங்கம், மா.கம்யூ., கட்சியினர், காலை, 10:00 மணி முதல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம், 1:00 மணிக்கு, தாசில்தார் பாலாஜி, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயலட்சுமி, மல்லியக்கரை போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறி, ஆவணங்களை காட்டினர். பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us