/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
/
அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 08, 2025 07:23 AM
ஆத்துார்: பணி நிரந்தரம் செய்யக்கோருதல் உள்பட, 10 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தி, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, வடசென்னிமலை பகு-தியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், பணிபு-ரிந்து வரும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள், சங்க கிளை தலைவர் பெரியசாமி தலைமையில், நேற்று வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவுபடி கவு-ரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்புடன் பணி மாறுதல்; பெண்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குதல்; குழு காப்பீடு திட்டம்; வருங்-கால வைப்பு நிதி பிடித்தம் செய்தல்; மாத நிலுவை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.