sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவிலில் பஜனை மடம் திறப்பை எதிர்த்து மறியல்

/

கோவிலில் பஜனை மடம் திறப்பை எதிர்த்து மறியல்

கோவிலில் பஜனை மடம் திறப்பை எதிர்த்து மறியல்

கோவிலில் பஜனை மடம் திறப்பை எதிர்த்து மறியல்


ADDED : ஜன 13, 2025 02:25 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே கோவிலில் பஜனை மடம் திறக்கப்பட்டதை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலுார், தொளசம்பட்டி அருகே முத்தாம்பட்-டியில் வேட்டராய பெருமாள் சுவாமி பஜனை மடம் உள்ளது. அங்கு ஊர் கவுண்டராக இருந்த இளங்கோவன் தன்னிச்சையாக செயல்பட, பக்தவச்சலம் என்பவரை தர்மகர்த்தாவாக நியமித்து, மக்கள் மூன்றாண்டாக பூஜை செய்கின்றனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், இளங்கோவன் தொடர்ந்த வழக்கு நிலு-வையில் உள்ளது. அதேசமயம் மூன்றாண்டாக மடம் பூட்டப்பட்-டிருந்தது. இதனால் பக்தவச்சலம் தரப்பினர், புதிதாக கோவில் கட்டி தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை இளங்கோவன் தரப்பினர், பஜனை மடத்தை திறந்து பூஜை செய்ய முயன்றதால், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜயகுமார் என்பவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணிக்கு வந்த தொளசம்பட்டி போலீசார், அவரை தடுத்து மீட்டனர்.

பின் முத்தாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில், மதியம், 12:00 மணிக்கு, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் பேச்சு நடத்தினர். பின் பஜனை மடம் பூட்டப்பட்டதால் ஒரு மணி நேரத்தில் மறியலை கைவிட்டனர். தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், டி.எஸ்.பி., தலைமையில் அமைதி பேச்சு நடந்தும் முடிவு எட்டப்படவில்லை.






      Dinamalar
      Follow us