sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா

/

நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா

நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா

நகராட்சி அலுவலகம் உள்ளே அடிப்படை வசதி கேட்டு தர்ணா


ADDED : டிச 14, 2024 01:17 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், டிச. 14-

தாரமங்கலம், 4வது வார்டு குருவம்பாறையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று, நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள், அலுவலகம் உள்ளே தரையில் அமர்ந்து, 'தமிழக அரசே; அடிப்படை வசதிகளை செய்து கொடு' என, கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, நகராட்சி தலைவர் குணசேகரனை, அவரது அறை முன் சந்திந்தனர்.

அப்போது மக்கள், 'எங்கள் பகுதியில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. சாலை இல்லாததால், உடல்நிலை சரியில்லாதவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல முடியாமல் தவிக்கிறோம். அடிப்படை வசதி கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. தற்போது மழைக்காலம் என்பதால், எங்கள் பகுதியே சேறு, சகதியாக உள்ளது' என்றனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக, தலைவர் கூறியதால், மக்கள் கலைந்து

சென்றனர்.






      Dinamalar
      Follow us