sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

/

மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்


UPDATED : பிப் 15, 2025 02:33 AM

ADDED : பிப் 15, 2025 01:43 AM

Google News

UPDATED : பிப் 15, 2025 02:33 AM ADDED : பிப் 15, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம்:மரவள்ளி கொள்முதல் விலையை உயர்த்தி கேட்டு, சேலம் சேகோசர்வ் நிறுவனம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.

அதில் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு பேசுகையில், ''கலெக்டர் தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் மரவள்ளி கிழங்கின் மாவு சத்துக்கு ஏற்ப, பாயின்டுக்கு, 300 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன், 270 ரூபாய்க்கு விற்ற மரவள்ளி, தற்போது, 220 ரூபாயாக குறைந்துவிட்டது. ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், சேகோ நிறுவனம் சேர்ந்து, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது,'' என்றார்.

தொடர்ந்து சேகோசர்வ் நிறுவன இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்ட செயலர் ராமமூர்த்தி, ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அரங்க சங்கரய்யா, செயலர் சரவணன், நிர்வாகிகள்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us