/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளி விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
மாற்றுத்திறனாளி விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜன 31, 2025 02:54 AM
சேலம்: சேலம் தொங்கும் பூங்காவில், மாற்றுத்திறனாளிகள் சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு-வலர் மகிழன், கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ஆரம்ப கால தலையீடு, சமூக நலப்பிரிவு, சுய வேலைவாய்ப்பு பிரிவு, சட்ட உதவிகள், திருமண உதவி மையம் உள்பட, 12 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தொழில் முனைவோர் பயிற்சி முடித்த-வர்களுக்கு, சான்றிதழ், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட தொழில் மைய அலுவலர் மோகன், தமிழ்நாடு உதவும் கரம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில உதவி தலைவர் அத்-தியண்ணா, சேலம், திருவண்ணாமலை, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

