sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

132 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

/

132 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

132 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

132 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஆக 29, 2024 07:48 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமசேஷபுரத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: மணிவிழுந்தான் ஊராட்சிக்கு சிறப்பு கவனம் எடுத்து பணி மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த முகாமில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், இணையவழி பட்டா மாறுதல், கூட்டுறவு, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ உள்ளிட்ட துறைகள் சார்பில், 132 பயனாளிகளுக்கு, 1.66 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து வேளாண், தோட்டக்கலை, மருத்துவம், சமூக நலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கால்நடை, மகளிர், தாட்கோ திட்டம் சார்பில் அமைத்திருந்த அரங்குகளை, கலெக்டர் பார்வையிட்டார். ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us