sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளரிடம் பி.டி.ஓ., சீண்டிய புகார்ஆண்களை வெளியேற்றி பெண்களிடம் விசாரணை

/

துாய்மை பணியாளரிடம் பி.டி.ஓ., சீண்டிய புகார்ஆண்களை வெளியேற்றி பெண்களிடம் விசாரணை

துாய்மை பணியாளரிடம் பி.டி.ஓ., சீண்டிய புகார்ஆண்களை வெளியேற்றி பெண்களிடம் விசாரணை

துாய்மை பணியாளரிடம் பி.டி.ஓ., சீண்டிய புகார்ஆண்களை வெளியேற்றி பெண்களிடம் விசாரணை


ADDED : ஏப் 09, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாய்மை பணியாளரிடம் பி.டி.ஓ., சீண்டிய புகார்ஆண்களை வெளியேற்றி பெண்களிடம் விசாரணை

ஆத்துார்:ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் ஒன்றிய அலுவலகம் உள்ளது. அங்கு, 2024ல் டெங்கு பணியாளர், ஒன்றிய அலுவலக துாய்மை பணியாளராக, ஆத்துாரை சேர்ந்த, 35 வயது பெண் பணியாற்றினார். 3 மாதங்களுக்கு முன், அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, பி.டி.ஓ., பரமசிவம், 59, பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், சமீபத்தில் சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம் புகார் அளித்தார். இதனால் விசாரணை குழு அமைத்து, கலெக்டர் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை அலுவலர் மதுமிதா, கூடுதல் திட்ட அலுவலர் நந்தினி ஆகியோர், ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில், முதல் கட்ட விசாரணை நடத்தினர். அப்போது, ஆண் பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, 20க்கும் மேற்பட்ட பெண் அலுவலர், பணியாளர்களிடம், 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை செய்தனர்.

இதுகுறித்து விசாரணை குழுவினர் கூறுகையில், 'புகாரின் உண்மை தன்மை குறித்து, முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பணிபுரியும் அலுவலர், பணியாளர்களிடம், பி.டி.ஓ.,வின் செயல்பாடு, நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

பி.டி.ஓ., பரமசிவத்திடம் கேட்டபோது, ''3 மாதங்களுக்கு முன், பாலியல் தொந்தரவு செய்ததாக கூறும் பெண், தற்போது ஏன் புகார் அளிக்க வேண்டும். அவரிடம் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. சிலர் துாண்டுதலில் பொய் தகவல் கூறுகின்றனர். விசாரணையின்போது இதுதொடர்பாக தெரிவிப்பேன். பணி ஓய்வு நேரத்தில் என் மீது களங்கம் ஏற்படுத்த இச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us