sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொது சுகாதார குழு தலைவர், ஓசூர் மாநகராட்சி

/

பொது சுகாதார குழு தலைவர், ஓசூர் மாநகராட்சி

பொது சுகாதார குழு தலைவர், ஓசூர் மாநகராட்சி

பொது சுகாதார குழு தலைவர், ஓசூர் மாநகராட்சி


ADDED : மே 06, 2025 01:42 AM

Google News

ADDED : மே 06, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள்

மகுடஞ்சாவடி:

மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம்,

மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலுார் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 1,200க்கும் மேற்பட்ட பெண்கள் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களை கண்காணித்து வேலை வாங்கும் பணியில், பணிதள பொறுப்பாளர் பணியில், 2016 முதல் அமுதா, வாசுகி, அனிதவேணி பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களை, சில நாட்களுக்கு முன்பு இடமாறுதல் செய்து விட்டு, நேற்று முதல் வேறு பணியாளர்களை நியமித்தனர். அதனால் கூடலுார் கிராமத்தை சேர்ந்த, ஏரி வேலை செய்யும் பெண்கள், 100 பேர் நேற்று காலை, 11:30 மணியளவில் திரண்டு வந்து, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை

முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், இடமாற்றம் செய்யப்பட்ட மூன்று பேரை, மீண்டும் அதே பகுதியில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூச்சலிட்டனர்.

பின்னர், பி.டி.ஓ., சத்தியேந்திரனிடம் மனு அளித்ததை தொடர்ந்து, மீண்டும் அவர்களே பணிபுரிவார்கள், இடமாற்றம் இல்லை என கூறியதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், இரண்டு மணி நேரம் பி.டி.ஓ., அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.






      Dinamalar
      Follow us