sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.100 செலுத்தினால் குடிநீர் இணைப்பு புன்செய்புளியம்பட்டி நகராட்சி சலுகை

/

ரூ.100 செலுத்தினால் குடிநீர் இணைப்பு புன்செய்புளியம்பட்டி நகராட்சி சலுகை

ரூ.100 செலுத்தினால் குடிநீர் இணைப்பு புன்செய்புளியம்பட்டி நகராட்சி சலுகை

ரூ.100 செலுத்தினால் குடிநீர் இணைப்பு புன்செய்புளியம்பட்டி நகராட்சி சலுகை


ADDED : ஜன 21, 2025 06:06 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புஞ்செய்புளியம்பட்டியில், 100 ரூபாய் செலுத்தினால், உடனடி-யாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்-ளது.

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் அம்ருத், 2.0 திட்டத்தில், குடிநீர் திட்ட அபிவிருத்தி பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தில் அனைத்து வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்-ளலாம்.

இதன்படி வீட்டு குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை, 4,000 ரூபாய்; வணிக குடிநீர் இணைப்புக்கு, 7,000 ரூபாயாக நிர்ணயிக்-கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், 100 ரூபாய்

முன்பணமாக நகராட்சி அலுவ-லகத்தில் செலுத்தி, புதிய இணைப்பை உறுதி செய்து கொள்-ளலாம். மீதி தொகையை குடிநீர் கட்டணம் செலுத்தும் போது தவணை முறையில் செலுத்தலாம். அதாவது, 10 மாதத்தில் செலுத்திக்

கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. டெபாசிட் முழு தொகையையும் செலுத்தியும் குடிநீர் இணைப்பு பெறலாம். புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர், வீட்டு பத்திரம் அல்லது பட்டா நகல், வரி ரசீது நகல் உள்ளிட்ட

ஆவணங்களை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரிட்சாத்த முறையில், பு.புளியம்பட்டி நகராட்சியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்-படும் என, நகராட்சி துறை அதிகாரிகள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us