/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராகி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
ராகி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 28, 2024 02:28 AM
ஓமலுார்: ஓமலுார், பனங்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில், கேழ்வரகு(ராகி) நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு, கடந்த, 5 முதல் செயல்படுகிறது.
இதுகுறித்து ஓமலுார் வேளாண் உதவி இயக்குனர் தவமணி கூறி-யதாவது:
ராகி கிலோ, 42.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் பயன்
பெறவுள்ள சேலம் மண்டல விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்-றுடன், ஓமலுார் ராகி கொள்முதல் நிலையத்தை அணுகி, முன்ப-திவு செய்து கொள்ளலாம். கொள்முதல் செய்யப்படும் ராகிக்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் எந்த பிடித்தமுமின்றி நேரடியாக வரவு வைக்கப்படும். விபரங்களுக்கு, 9600814730 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

