sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரவுடிகள் அட்டகாசம்: 3 பேர் கைது

/

ரவுடிகள் அட்டகாசம்: 3 பேர் கைது

ரவுடிகள் அட்டகாசம்: 3 பேர் கைது

ரவுடிகள் அட்டகாசம்: 3 பேர் கைது


ADDED : மார் 11, 2024 02:16 AM

Google News

ADDED : மார் 11, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லுார்:மல்லுார் அருகே நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 25. பெயின்ட் அடிக்கும் தொழில் செய்கிறார். அவருக்கு, 3 அண்ணன், ஒரு தம்பி உள்ளனர். அதில் ஒரு அண்ணன் விக்னேஷ், 28, சேலம் டவுனை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஒரு பைக்கில் வந்த, 3 பேர், சூர்யா வீட்டின் முன் நின்றனர். 'உன் அண்ணன் விக்னேஷ் எங்கே' என கேட்டு, சூர்யாவை கத்தியால் வெட்டினர். அவரது நண்பர் சங்கர், பாட்டி ராசாத்தி ஆகியோரை கட்டையால் தாக்கினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைத்தனர்.

மேலும் அந்த வழியே நடந்து சென்ற தங்கேஸ்வரன் என்பவரின் தலையில் கத்தியால் வெட்டினர். பின் மூவரும் பைக்கில் தப்பினர். காயம் அடைந்த, 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மல்லுார் போலீசார் விசாரித்து, சேலம், கிச்சிப்பாளையம் கார்த்தி, 26, அவரது தம்பி கவுதம், 25, பொன்னம்மாபேட்டை தமிழரசன், 19, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us