ADDED : ஆக 30, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல், வெயில் அதிகமாக இருந்தது.
ஆனால் இரவு, 7:00 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஆத்துார், நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம், அம்மம்பாளையம், மஞ்சினி, மல்லியக்கரை பகுதிகளில் கன மழையாக பெய்தது. 8:00 மணி வரை பெய்த மழையால், சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பின் குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால், விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை, 6:00 மணிக்கு கருமேகம் சூழ்ந்து, வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெரிய கிருஷ்ணாபுரம், சிங்கிபுரம்
உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.