/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பைக்கிடங்கில் தீ அணைத்தது 'மழை'
/
குப்பைக்கிடங்கில் தீ அணைத்தது 'மழை'
ADDED : ஜூலை 12, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் நகராட்சி சர்க்கார் தோட்டம், பன்னீர் மலை அடிவாரம், பிளாஸ்டிக், பாட்டில்கள் பிரித்து எடுத்தது போக, 100 டன்னுக்கு மேல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு தான், நகராட்சியில் தினமும் சேகரிப்படும், 6 டன் குப்பை தரம் பிரித்த பின் கொட்டப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, குப்பையின் ஒரு பகுதி எரிந்து புகை மண்டலமாக மாறியது.நேற்று காலை வரையிலும், தொடர்ந்து குப்பை எரிந்து கொண்டிருந்தன. மதியம், 12:30 மணிக்கு மேட்டூரில் மழை பெய்ய, குப்பை நனைந்து அணைந்தது.