/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
/
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : டிச 07, 2025 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில் உள்ள பக்கநாடு, ஆடையூர் பகுதிகளில் ஏராளமான செம்மண் உள்-ளது. இந்த செம்மண்ணை, அரசு அனுமதியில்-லாமல் கள்ளத்தனமாக செம்மண்
அள்ளப்படுவ-தாக இடைப்பாடி, குண்டத்துமேட்டில், கனிமவளத்துறை தாசில்தார் ராஜ்குமார், நேற்று முன்-தினம் நள்ளிரவு ஆய்வு செய்தார். அப்போது, 3 யுனிட் செம்மண்ணை அள்ளிக்கொண்டு செல்ல முயன்ற டிப்பர் லாரியை நிறுத்தினார்.
உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார். செம்மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், பூலாம்-பட்டி போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார், லாரி டிரைவரை தேடுகின்றனர்.

