sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்

/

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 24, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி அருகே, உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலருக்கு இழப்பீடு கேட்டு, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த குடிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 45. இவர், பஞ்சாப் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். உடல் நலம் பாதித்து, சிகிச்சையிலிருந்த அவர் கடந்த, 21ல் அங்கு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊருக்கு நேற்று ராணுவத்தினர் எடுத்து வந்தனர்.

ஆனால், அவரது குடும்பத்தினருக்கு, ராணுவம் மூலம் வழங்கப்படும் இழப்பீடு மற்றும் அதற்கான உத்தரவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனக்கூறி, காலை, 11:00 மணிக்கு, நல்லம்பள்ளி - குடிப்பட்டி சாலையில், அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் கார்த்திகேயனின் சடலத்தை வைத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்னமூர்த்தி, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் மற்றும் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகள் அனைத்தும், ஒருவார காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும் என, ராணுவ அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், மதியம், 1:00 மணிக்கு கலைந்து சென்றனர். தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன், கார்த்திகேயனின் உடல், குடிப்பட்டி மயானத்தில், அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us