/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தவறுதலாக வந்த ரூ.2.50 லட்சம் உரியவருக்கு அனுப்பி வைப்பு
/
தவறுதலாக வந்த ரூ.2.50 லட்சம் உரியவருக்கு அனுப்பி வைப்பு
தவறுதலாக வந்த ரூ.2.50 லட்சம் உரியவருக்கு அனுப்பி வைப்பு
தவறுதலாக வந்த ரூ.2.50 லட்சம் உரியவருக்கு அனுப்பி வைப்பு
ADDED : செப் 28, 2024 01:19 AM
தவறுதலாக வந்த ரூ.2.50 லட்சம்
உரியவருக்கு அனுப்பி வைப்பு
சேலம், செப். 28-
சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் முகமதுகாசிம். இவரது மகன் முகமது அர்ஷத், தனியார் பள்ளியில் ஒன்பதாவது படிக்கிறார். இவரது வங்கி கணக்கிற்கு, இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கடந்த பிப்ரவரி மாதம் வந்துள்ளது.
மாணவனுக்கு, பணம் வந்தது குறித்து தெரியாது இருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர், மாணவனின் தந்தையை தொடர்பு கொண்டு, வட மாநிலத்தை சேர்ந்த அமித் மேங்கன் என்பவர், உங்களது மகன் வங்கி கணக்கிற்கு, 2.50 லட்சத்தை தவறுதலாக அனுப்பி உள்ளார், அந்த பணத்தை உரியவர்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மாணவனின் தந்தை, சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் தொடர்பு கொண்டார், அப்போது பணம் தவறுதலாக அனுப்பியவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமித் மேங்கன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி கணக்கில் உள்ள பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க, நேற்று நீதிமன்ற
வளாகத்தில் உள்ள வங்கிக்கு வந்து, தவறுதலாக அனுப்பிய நபரின் வங்கி கணக்கிற்கு மாணவன், அவரது தந்தை, ரூ. 2.50 லட்சத்தை அனுப்பினர். இதையறிந்த வங்கி ஊழியர்கள் மாணவனை
பாராட்டினர்.