sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.80 ஆயிரம் வழிப்பறி சிக்கிய மூவருக்கு காப்பு

/

ரூ.80 ஆயிரம் வழிப்பறி சிக்கிய மூவருக்கு காப்பு

ரூ.80 ஆயிரம் வழிப்பறி சிக்கிய மூவருக்கு காப்பு

ரூ.80 ஆயிரம் வழிப்பறி சிக்கிய மூவருக்கு காப்பு


ADDED : நவ 22, 2025 01:25 AM

Google News

ADDED : நவ 22, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,: சேலம் அழகாபுரம், நாகம்மாள் தோட்டம், மார்க்கபந்து தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார், 56. இவர், 4 ரோடு அருகே பீடா ஸ்டால் வைத்துள்ளார். இவருக்கு ஏற்கனவே அறிமுகமான மணிகண்டன் என்பவர், நேற்று காலை, 9:00 மணியளவில் மொபைலில் தொடர்பு கொண்டு, 5 ரோடு ஜவுளிக்கடை அருகே நின்றிருப்பதாகவும், நான் தேடும் முகவரி தெரியாத காரணத்தால், நேரில் வரும்படி அழைத்துள்ளார்.

அதை கேட்ட மனோஜ்குமார், பீடா ஸ்டாலுக்கு தேவையான சரக்குகள் வாங்கும் அவசரத்தில், 80,500 ரூபாயை எடுத்து கொண்டு, ஜவுளிக்கடை எதிரே பாலத்துக்கு அடியில் சென்றுள்ளார். அங்கு கூட்டாளிகள் இருவருடன் நின்றிருந்த மணிகண்டன், கத்தியை காட்டி மிரட்டி, மனோஜ்குமாரிடம் இருந்த, 80,500 ரூபாயை பறித்து கொண்டதோடு, வெளியே சொன்னால் கொன்று விடுவதாக எச்சரித்துவிட்டு மூவரும் தப்பினர்.

பீடா ஸ்டால் உரிமையாளர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் வழக்குபதிந்து, தர்மபுரி மாவட்டம், நாகோஷிணஹள்ளியை சேர்ந்த மணிகண்டன், 36, அவருடைய கூட்டாளிகள் மேட்டூர் தண்ணீர் குட்டப்பட்டியை சேர்ந்த கவுதம், 37, மேச்சேரி காளிப்பட்டியை சேர்ந்த கோவிந்தன், 33, ஆகிய மூவரையும் கைது செய்து, வழிப்பறி செய்த பணத்தை மீட்டனர்.






      Dinamalar
      Follow us