sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

/

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 01, 2025 01:31 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஜன. 1-

பஞ்சப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன், வாயில் கறுப்பு துணி கட்டியபடி நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, 109 மாத பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ்நாடு அரசு மதித்து நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டல தலைவர் பழனிவேல் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; மவுனம் சாதிக்கக் கூடாது, ஆயுள் முழுவதும் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின்பு பண பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம். காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, முறையாக செயல்படுத்த வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மண்டல செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us