sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வருவாய்த்துறை போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

/

வருவாய்த்துறை போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வருவாய்த்துறை போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வருவாய்த்துறை போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு


ADDED : செப் 04, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. சேலத்தில் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து, காலை, 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள, 564 அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, வாரத்துக்கு 2 மட்டும் நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசுகையில், 'பணி நெருக்கடி தாங்க முடியாமல் வீதிக்கு வந்து போராடுகிறோம். அரசு உணர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.

வருவாய்த்துறை போராட்டத்தால், சேலம் மாவட்டத்தில், 14 தாலுகா, 4 ஆர்.டி.ஓ., - கலெக்டர் அலுவலக பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் தொடர்பான ஓட்டுச்சாவடி பிரித்தல், இடம் மாற்றுதல், பட்டா மாறுதல், 40 வகை சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us