நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் ஊமை மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச், 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து கம்பம் நடுதல், அக்னி, பூங்கரகம், சக்தி அழைத்தல், பொங்கல், அலகு குத்துதல் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் பூப்-பல்லக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று அய்யனாரப்பன் விழா குழு சார்பில், கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. 700க்கும் மேற்பட்ட பக்தர்கள், மக்கள் பங்கேற்றனர்

