sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்

/

நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்

நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்

நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்


ADDED : நவ 28, 2024 06:49 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: நெல்லுக்கு, 'செஸ்' வரியை ரத்து செய்ய, அரிசி ஆலை உரிமை-யாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

சேலம் அரிசி ஆலை உரிமையாளர் சங்க, 62ம் ஆண்டு நிறைவு விழா கூட்டம், தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது.

அதில் அரிசி, கோதுமை மற்றும் ஆயில் மில்லுக்கு அனுப்பப்-படும் தவிடு உள்ளிட்ட பொருட்கள் மீது

விதிக்கப்பட்டுள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற, தமிழக அரசு அழுத்தம் கொடுத்தல்;

விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும் நெல்லுக்கு செலுத்தும், 'செஸ்' வரியை ரத்து செய்ய, மாநில அரசை

கேட்டுக்-கொள்ளுதல்; 99 சதவீத சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கியில் கடன் பெற்று

இயங்குவதால், அந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி உயர்த்திய, 2 சதவீத வட்டியை திரும்ப பெற வேண்டும்.ஆலைகளில் மின்கட்டண உயர்வால், ஆண்டுக்கு கூடுதலாக பல லட்சம் ரூபாய் செலுத்துவதால் தமிழக

அரசு பரிசீலித்தல்; சொந்த நிலம் வாங்கி கடைகள் கட்டி தொழில் செய்ய வழியற்றோர், உள்-ளாட்சி கடைகளை

வாடகைக்கு எடுத்து தொழில் செய்யும் நிலையில், அதற்கு மிகப்பெரிய வாடகை உயர்வை, உள்ளாட்சி துறை

அறிவித்துள்ளதால் மறுபரிசீலனை செய்தல்; 12க்கும் மேற்-பட்ட அரசு துறைகளின் உரிமம் பெற்று

ஆலைகளை நடத்தும் நிலையில், புதுப்பித்தல் என்றாலே அரசு அலுவலர்களுக்கு ஆண்-டுதோறும் கையூட்டு

செலுத்தும் அவல நிலையில் தொழிற்சா-லைகள் இயங்குகின்றன. அதனால் வணிக வரி, வருமான வரித்-துறை

நிரந்தர பதிவு முறையை கொண்டு வருதல் என்பன உள்-பட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத்தலைவர் தமிழ்செல்வன், செயலர் ஏ.முருகேசன், பொரு-ளாளர் எஸ்.முருகேசன் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us