ADDED : ஜூலை 31, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம், 45வது வார்டில் உள்ள குகை, எருமாபாளையம் மயானம், ஏ.ஏ.ரோடு, பஞ்சந்தாங்கி மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கொல்லம்பட்டறை உள்ளிட்ட பகுதி களில், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நேற்று ஆய்வு நடத்தினார்.
குகை, எருமாபாளையத்தில் சுற்றுச்சுவர் அமைக்கவும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் உத்தரவிட்டார். ஏ.ஏ.ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து துாய்மை பணிகளை பார்வையிட்டார்.